என் மேல்
சிந்திச்சிதறும்
மழைத்துளிகளை
சேமிக்கிறேன்…
உனக்கு முன்
எனைத்
தீண்டியவையென
காமிக்க…..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில்லிடும்
சாரல்போல்
சிலிர்க்க
செய்வதில்….
கண்ணீர் உகுக்கும்
கணங்களில்
கட்டியணைத்துக்
கொள்வதில்….
சின்ன சின்ன
சண்டையில்
சித்தரவதை
செய்வதில்….
தூக்கப்
பொழுதுகளில்
குளிர்
பரப்புவதில்…..
கோபம் கொள்ளும்
ஊடலில்
மெலிதாய்
தீண்டுவதில்…..
கொஞ்சிக் குழையும்
கூடலில்
முழுதாய்
ஆட்கொள்வதில்….
எனக்கு மட்டும்
என்னில் மட்டும்
பெய்யெனப்பெய்யும் மழை
நீ….
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved