மெல்லிய தூரலில்
சில்லிட்டபடியே
நாம் கடந்து போகும்
பாதையெங்கும்
காதலே
விதைக்கப்படுகிறது
oO0Oo
என்றோ எடுத்த புகைப்படத்தில்
உன் குறுஞ்சிரிப்பும்
என் வெக்கமும்
கை கோர்த்திருக்க
கண்ணோரத்தில் துளிர்த்த
நீர் சொல்லியது
வெக்கம் ஒருநாளும்
ஈரம் போவதில்லையென….
oO0Oo
எனக்கு மட்டுமேயான
உன் இதய உலகத்தில்
என்னை இஷ்டம்போல்
உலவவிட்டுவிட்டு
நீ மட்டும் ‘காதலே’ என
அமர்ந்து கொள்கிறாய்
oO0Oo
யாருமில்லா தனியிரவில்
அரவு தீண்டிய
மௌன வலியாய்
உணர்கிறேன்
என் மீதான
உன் முதல் கோபத்தை….
oO0Oo
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2012].
All rights reserved