Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-09-11T09:50:00+02:00

இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

Posted by கண்மணி.....

இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

 

மதம் இனம் மொழி
மற்றெதுவும் கடந்து
மனதை மட்டுமே மையமாய்
அன்பை மட்டுமே
ஆணிவேராய் கொண்டு
மலர்வதே காதல் என்று
இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

 

கட்டிவைக்கும் பூவும்
காலில் ஆடும் கொலுசும்
இட்டு வைக்கும் பொட்டும்
இன்னும் இருக்கும் உயிரும்
காதலனுக்கு மட்டுமே
கண்டவனுக்கு இல்லை என்று
இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

 

மனதில் ஒருவனை
சுமந்திருக்க
மற்றவன் வந்து
மணம் முடிக்க
பார்த்து செல்வது
மரணித்துக் கொண்டிருக்கும்
மலரின் மீது
மண்ணெண்ணெய்
ஊற்றுவதுபோல் என்று
இவர்களுக்கு ஏன் புரியவில்லை….?

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
<br /> கணவன் காதலனாகலாம்<br /> காதலன் கணவனாக முடியா<br /> சூழல் காலந்தோறும்<br /> <br /> <br />
Reply
P
<br /> nice and good .Keep going .Thanks<br /> <br /> <br />
Reply
U
<br /> thnak you so much... :)<br /> <br /> <br />
Reply
W
<br /> என்ன,, உங்க வீட்ல கல்யாண பேச்சு எடுத்துட்டாங்களா ??<br /> <br /> " கட்டி வைக்கும் பூவும், காலில் ஆடும் கொலுசும் " - I Like This...<br /> <br /> <br /> கவிதை கலக்கலாக இருக்கிறது....<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog