முதலாம் சந்திப்பில்
முகம் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்....
இரண்டாம் சந்திப்பில்
இன்பமாய் நாம் வாழ ஆவல் கொண்டேன்....
மூன்றாம் சந்திப்பில்
முழுவதுமாய் என் மனம் தந்தேன்....
நான்காம் சந்திப்பில்
நல்வழி நின்று நாணம் கொண்டேன்.....
ஐந்தாம் சந்திப்பில்
ஐயம் திருபுர உன்னை எண்ணிக்கொண்டேன்.....
ஆறாம் சந்திப்பில்
ஆண்டவன் அருள் வேண்டி கொண்டேன்....
எழாம் சந்திப்பில்
எண்ணம் எல்லாம் உன்னையே நிறைத்து கொண்டேன்....
எட்டாம் சந்திப்பில்
என்றும் உன்னுடன் வாழ எண்ணிக்கொண்டேன்.....
என்னவனே,
ஒன்றும் சொல்லாமல்,
ஒற்றுமையாய் நில்லாமல்,
ஒன்பதாம் சந்திப்பை ஒழித்து
ஓடி மறைந்தாயே.....
பாசம் உணர்ந்து
பாவையிடம் நீ மீண்டு வரும்
பத்தாம் சந்திப்பில்
பார்ப்பாய் என்னை
மணமகளாய்.....
மாற்றானுக்கு....!
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.