நான்
கண்டதிலே நீ தான்
அழகாய் இருக்கிறாய்....
உன்னைக் கண்ட பின்
அனைத்தும் அழகிழந்துவிட்டது......
நான்
அறிந்ததிலே நீ தான்
புதுமையாய் இருக்கிறாய்.....
உன்னை அறிந்த பின்
அனைத்தும் பழமையாகிவிட்டது.....
நான்
உணர்ந்ததிலே நீ தான்
உண்மையாய் இருக்கிறாய்.....
உன்னை உணர்ந்த பின்
அனைத்தும் பொய்த்துப்போய்விட்டது.....
அழகிழந்தவற்றில்
நானும் அடக்கம்....
பழமையானவற்றில்
என் கவிதையும் பொருந்தும்.....
பொய்த்துப்போனவற்றில்
என் வாழ்வும் அடங்கும்....
ஆனாலும் காதலிக்கிறேன்.....
காதலை உன்னை
தவிர யாரிடம் கற்பது.....?
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.