முத்தமோ, புன்னகையோ
உன் இதழில் இருந்து உதிரும் போது
எனக்கு அமுதம் தான்.....
வெட்கமோ, கூச்சமோ
உன் கன்னங்களில் இருந்து வழியும் போது
எனக்கு இன்பம் தான்.....
கனவோ கற்பனையோ
உன் நினைவில் மிதந்து நனையும் போது
எனக்கு சொர்க்கம் தான்....
வாழ்வோ வரமோ
உன் வதனம் கண்டு திளைக்கும் போது
எனக்கு வசந்தம் தான்....
நீயோ நானோ
நம் காதல் நிறைந்து களிக்கும் போது
எனக்கு மோட்சம் தான்.....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.