Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-11-25T09:45:00+01:00

காதலன்றி வேறென்ன?

Posted by கண்மணி.....

மாலை மயங்கும் பொழுதில்
மழை சிந்தும் குளிரில்
மாட முற்றத்தில்
நீ தந்து
நான் அருந்தும்
தேநீரில்.....

நீண்ட பயணத்தில்
இரவு நேரத்தில்
எதிரெதிர் இருக்கையில்
நீ அனுப்பி
நான் சிலிர்க்கும்
பார்வையில்....

தாளாத தலை வலியில்
தாய் போன்ற உன் மடியில்
தானாக எனை ஏந்தி
நீ தேய்த்து
நான் உணரும்
விரலில்.....

இதோ
இந்த
மூச்சு முட்டும்
நெஞ்சடைக்கும்
தலை சுற்றும்
நம்
முதல் பிரிவில்....


எங்கும்
எதிலும்
நம்மோடு
பின்னி பிணைந்து
வேரோடி
விருட்சமாய்
நிற்பது
காதலன்றி
வேறென்ன?

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S
<br /> romba azhagana kavithai......<br /> Ennudaiya pazhaya ninaivugalai marubadiyum thanthathuku nanri......<br /> i like another poem which i read in some book.....<br /> <br /> Penney....!<br /> Enn irruthi oorvalam<br /> Unnai kadanthal<br /> orumurai azhuthu vidu<br /> Ennakaga alla enn<br /> KATHALUKAGA........<br /> <br /> <br />
Reply
S
<br /> nice yaar<br /> <br /> <br />
Reply
T
<br /> கலக்கல்..!<br /> <br /> <br />
Reply
J
<br /> natpin vali pirivu...<br /> kaathalin vali....?<br /> <br /> <br />
Reply
S
<br /> Was a nice one .. Good work..<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog