Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2009-12-07T10:27:00+01:00

ஆற்றாமை ............!

Posted by கண்மணி.....

மனசுல ஒன்ன வச்சேன்- உம்ம
உசுருல என்ன வச்சேன்
கைல கைய வச்சு- எனக்கு
காதல சொன்ன மச்சான்....

வாங்கி வந்த மல்லியப்பூ
வாசம் இன்னும் நிக்குதைய்யா.....
வீதியில வாரதெல்லாம்
உம்மொகமா தெரியுதைய்யா.....

கஞ்சி தண்ணி  கொறயில்ல
காசு பணம் கொறயில்ல
நெஞ்சு செத்து போச்சே - ஐயா
நீ போன பின்னாலே.....

தொட்டு தந்த குங்குமத்த
பொட்டா தெனம் வச்சுகிறேன்
காட்டு பாத போறதுக்குள்ள- வந்து
காட்டிப்புடு உம்மொகத்த.....

நெனப்புல வாழ்ந்திருக்கேன்
நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு.....
நெசமா உன்ன பாத்தா - மனசு
நெறஞ்சு, நிக்கும் எம்மூச்சு......

பட்டு துணி தேவையில்ல
நட்டு நக தேவையில்ல
கோடி துணி நீ தந்தா - ஓடி
சொர்கஞ்சேரும் ஏன் உசுரு.....

பட்டாளத்துக்கு போறப்போ
பாத்து போ னு அனுப்பிவசேன்
பாவி மக போகும் போது - நீ
பாக்கவாது வருவியா?

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
D
<br /> Hi, I think this is the best of all the poems I have read - Its very folkish and original - the emotional aspect is also appealing :) Keep up the good work!<br /> <br /> <br />
Reply
S
<br /> இந்தப்பாட்டுக்காக உங்களுக்கு 'பாரதிராணி' பட்டம் குடுக்கலாம்<br /> <br /> <br />
Reply
S
<br /> ...நட்டு நக....<br /> <br /> //புதுமைப்பித்தன் ஒரு இடத்துல 'வரத்து போக்கு 'அப்டின்னு எழுதியிருந்தார்...<br /> //அப்போ தான் போக்குவரத்து' ஓட இலக்கிய அர்த்தம் புரிஞ்சது ...<br /> <br /> <br />
Reply
T
<br /> அருமை..!<br /> <br /> <br />
Reply
S
<br /> Great site and the information is unique.<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog