ஊரில் திருவிழா.....
எல்லோரும் கோவில்
செல்கின்றனர்,
அம்மனை தரிசிக்க.....
நான் ஒருவன் மட்டும்
உன் வீடு
தேடி ஓடி வருகிறேன்.....
வீட்டில் பூஜை.....
எல்லோரும் கண் மூடி
கை கூப்புகின்றனர்
கடவுளை வணங்க.....
நான் ஒருவன் மட்டும்
உன் வீட்டு
ஜன்னல் பார்க்கிறேன்.....
நண்பர்கள்
மலைக்கு செல்ல
மாலை போட்டனர்.....
18 படி ஏற.....
நான் ஒருவன் மட்டும்
நீ தலை உலர்த்தும் போது
என் வீட்டு
மாடி படி ஏறுகிறேன்.....
அண்ணன் குழைந்தைக்கு
மொட்டை போட
குல தெய்வ கோவில்
சென்றனர்
நேத்திகடன் செலுத்த....
நான் ஒருவன் மட்டும்
உன் கூந்தல் பூவை
100 முறை முத்தமிடுகிறேன் .....
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.
இப்போதாவது
புரிந்துகொள்...
எனக்கு
'காதலே கோவில்...
நீயே தெய்வம்' என்று.....