Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2010-11-26T14:05:00+01:00

நீ...!!!

Posted by கண்மணி.....

aaaaa.JPG

 

தந்தைக்குப் பின்
என் கண் பார்த்து பேசும்
முதல் ஆடவன்
நீ...!!!

சீண்டும் எண்ணம்
சிறிதும் இன்றி
கை பிடித்து
அழைத்து செல்லும்
சுத்தமானவன்
நீ...!!!

ஆண்மைக்கும்
மென்மை உண்டு
மென்மையிலும்
மேன்மை உண்டு
உணரச் செய்தவன்
நீ...!!!


சாமத்தில்
நான் உறங்கிட
சத்தமின்றி
நெற்றியில்
இதழ் பதிக்கும்
உண்மைக் காதலன்
நீ...!!!

கவிதை பொழுதில்
இதழும்
முத்தப் பொழுதில்
விழியும்
ரசிக்கும் வித்தகன்
நீ...!!!

நிலவும் மனமும்
நினைவும் மகிழும்
உறவு கொண்டு
உரிமை தந்தவன்
நீ...!!!

உன்னை
பிரியுமொரு
தருணமது
வருமாயின்
வரத்தேவையில்லை
வசந்தமும்....
வாழத்தேவையில்லை
இந்த வாழ்வும்....

 

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S
<br /> //சீண்டும் எண்ணம்<br /> சிறிதும் இன்றி<br /> கை பிடித்து<br /> அழைத்து செல்லும்<br /> சுத்தமானவன்<br /> நீ...!!!//<br /> <br /> <br /> Nice lines & Yaar unga avar? ;) :)<br /> <br /> <br />
Reply
K
<br /> hey thanks da... :)<br /> <br /> <br />
Reply
I
<br /> யாருக்காக இந்த கவிதை எழுத பட்டிருகிறதோ,<br /> அவன்தான் உண்மையில் ஆண்மகன்.<br /> <br /> <br />
Reply
K
<br /> Thanks da thambi... :)<br /> <br /> <br />
Reply
S
<br /> super..! very impressive :)<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog