எந்த கம்பளியும்
என் குளிர் போக்காது
உன் கையணைப்பு தவிர....
எந்த அமுதமும்
என் தாகம் தணிக்காது
உன் எச்சில் தவிர....
எந்த பாடலும்
எனக்கு இசையாகாது
உன் சிரிப்பு தவிர....
எந்த வார்த்தையும்
என் கவியில் சேராது
உன் "ஓய்" தவிர...
எந்த தியானமும்
எனக்கு முக்தி தராது
உன் மௌனம் தவிர...
எந்த நிகழ்வும்
எனக்கு விழாவாகாது
உன் வரவு தவிர...
நான்
உனக்கு
என்ன தரவியலும்?
உன் உயிர் தின்னும்
உண்மை காதல் தவிர...
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.