Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

2010-12-16T12:06:00+01:00

அந்தாதி...

Posted by கண்மணி.....

(குந்தவை ராஜ ராஜ சோழனின் தமக்கை...
வந்தியத்தேவன் சோழப் படைத்தளபதி...
இருவரும் காதல் கொண்டு மணந்தனர்...
மனமொன்றிய காதலை மற்றவரறிய சொல்லிக்கொள்ளவில்லை...)

கவிதை அரங்கேறும் நேரம்:
----------------------------------------------------------------------
இளவரசி பல்லக்கில் இருக்கிறாள்...
இவன் குதிரையில் காவலாய் வருகிறான்....
இதயம் இரண்டும் பேசுகின்றன,
இறைவன் கோவில் செல்லும் வழியில்...
-----------------------------------------------------------------------


km2a.jpg


பல்லக்கில் செல்வதென்ன?
பால்வண்ண பைங்கிளியோ...
பாவையுந்தன் மேனியது
பகலிலும் வரும் நிலவோ?

நிலவென்னய்யா?
நிதம் தேயும் வளரும்...
நானும்  நீயும்
வானும் நீலமன்றோ....

நீலமே நீயானால்
நீள்கடலுக்கும் உரித்தாவாய்
உடலின் உதிரமென்பேன் - உன்
உயிரில் உயிர்கரைவேன்...

கரைந்துபோனால், நான்
கலங்கிப் போகேனோ... உயிர்
கலந்து கரைசேர்வோம், கவலை
மறந்து விண்சேர்வோம்....

விண்சேர்ந்தென்ன செய்ய?
கண் சேராது போனபின்....
மண் புதைந்து போவேன் - இந்த
பெண் சேராது போயின்...

போனதும் வந்ததும்
போய்சேர்ந்த தடமெங்கே?
பொய்யறியா பெண்ணிவளை - நீ
விட்டுசென்ற இடமெங்கே?

இடமொன்று தடையிலை
இனியவளே உனைச்சேர
இப்போழ்தே இணைவோம்
இறைவனவன் சந்நிதியில்...

(கோவில் அடைகின்றனர்)



Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
S
<br /> மறக்க முடியாத அத்யாயங்கள்... செழுமையான கற்பனை...<br /> <br /> <br />
Reply
R
<br /> Very Nice<br /> <br /> <br />
Reply
M
<br /> ///விண்சேர்ந்தென்ன செய்ய?<br /> கண் சேராது போனபின்....<br /> மண் புதைந்து போவேன் - இந்த<br /> பெண் சேராது போயின்...///<br /> <br /> சில நேரம் என் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு வரி கொடுக்கப்பட்டுள்ளன இங்கே...மகிழ்ச்சி<br /> <br /> <br />
Reply
K
<br /> mikka nandri Bala n Dinakaran... :)<br /> <br /> <br />
Reply
D
<br /> vazhuka kaaviya kadhal mikavum nerthiya kaiyanndullirigal<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog