காற்றிலாடும்
உன் காதோரக்
கூந்தல் ஒதுக்கும்
பணியிலமர்த்து
என்னை...
ஓயாமல்
உன் காதில்
என் காதல்
உரைக்க....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கோலம்
போடுகையில்
உன் பாதம்
ஆடிடும்
கொலுசழகை
காணவே
கண்விழிக்கிறேன்
அதிகாலை தினமும்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தூங்க தானே போகிறாய்,
ஏன் முகம் கழுவ வேண்டும்?"
இப்படி கேட்கும் தாய்க்கு
எப்படி தெரிவிப்பேன்?
கனவில் நீ வருவதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லோரும் கேட்கிறார்கள்
"யாரைக் காதலிக்கிறாய்"
எப்போதும் கூறுகிறேன்
"பேர் சொல்லக்கூடாது"
நீ மட்டும் கேட்பதில்லை
"யார்" என்று...
நானும் கூறவில்லை
"நீ" என்று...
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2010].
All rights reserved.