காணவில்லையென
தேடியலைகிறேன்…..
நான் வந்து சேர்ந்ததாய்
நீ அனுப்பிய செய்தியை….
**************************************
எப்போதுமே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
இப்போது
நீ என்ன
நினைத்துக்கொண்டிருப்பாயென….
*****************************************
உன் அழைப்பிற்கு
காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
நீயே வீற்றிருக்கிறாய்
என் நேரத்தை
ஆட்சி செய்துகொண்டு……
***********************************
கண்ணை மூடி
உன்னை
சிந்திக்கும்போது
சிந்திவிழும்
கண்ணீரைத்தான்
கவிதையாக்குகிறேன்….
*********************************
உன்னைக்
காணும்
எல்லாநாளும்
எனக்கு
முகூர்த்த நாள்தான்….
என்ன விசேஷம்
என்பது மட்டும்
உன்னைப் பார்த்தபின்
தீர்மானிக்கப்படும்…..
**********************************
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.