Overblog All blogs Top blogs Literature, Comics & Poetry
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

2011-06-20T08:21:00+02:00

ஒரு தலைக் காதல்

Posted by கண்மணி.....

 

 

 

எனக்கு
தெரிந்தேதானிருந்தது….
நீ
என்னை நேசிக்கத் 
தொடங்கியிருக்கிறாயென….

உனக்கு தெரியுமா
இல்லையாஎன
தெரிந்து கொள்ளவே
தெரியாதவளாய் இருந்தேன்
நீயாய் தெரியப்படுத்தும்வரை….
********************************************************************

நடக்காதென
தெரிந்திருந்தும்
நீ நேசிக்க
தயங்கவில்லை….
நடக்கவே முடியாதென
புரிந்திருந்தும்
உன் நேசத்தை
தடுக்கவில்லை….
********************************************************************

என் கணவனாகும்
தகுதி உனக்கிருப்பதை
ஆயிரம் முறை
உணர்த்திய நீ,
உன் மனைவியாகும்
அதிர்ஷ்டம் எனக்கில்லைஎன
ஒருமுறையேனும்
உணர்ந்திருக்கலாம்…..
********************************************************************
‘ஏன் முடி வெட்டின?’
‘எப்போயிருந்து கண்மை போடற?’
‘கொலுசு மாத்திட்ட போல?’
‘இந்த ஜிமிக்கி ஒடஞ்சு போச்சுன்னு சொன்ன?’
‘கொஞ்சம் குண்டாய்ட்ட’
மூன்றாண்டுகளுக்குப் பிறகு
முகம்பார்த்த போது
உனதிந்த கேள்விகள்தான்
உணர்த்தின
என் மீதான
உன் நேசத்தையும்
அது இன்னும்
உயிரோடிருப்பதையும்….
********************************************************************

 

 

 

Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.

See comments

To be informed of the latest articles, subscribe:
comments
T
<br /> nice :)<br /> <br /> <br />
Reply

Girl Gift Template by Ipietoon - Hosted by Overblog