வட்டிலிலிட்ட சோறு
வாயில் படாமல்
வாடி வதங்கிப்போகிறேன்
‘வா சாப்டலாம்’ என்ற
வார்த்தை நீ தராமல்…..
சிரிக்க மறந்து
சிந்தனை மறந்து
சிதிலமடைந்து போகிறேன்
சின்ன சின்ன சண்டை
எதுவுமில்லாமல்…..
அலைபேசியும்
ஆதரிப்பாரின்றி
அநாதையாகிப் போகிறது
‘அமு’ என்றவுன்
அழைப்பு வராமல்…..
எதிர்படுபவர்கள்
ஏதேனும் கேட்குமுன்
எச்சரிக்கையோடிருக்கிறேன்
எப்போதும் போல நீ
என்னருகே இல்லாமல்…..
ஒருநாளும் ஒருபொழுதும்
ஒரு பயமும், கவலையும்
அணுகாது காத்தாய்
அது பொய்த்துப்போயின்
போவேன் ஒன்றுமில்லாமல்…..
நானாய் வேண்டிக்கொண்ட இப்பிரிவு
வானாய் நீண்டு போக பூமிக்கு
வீணாய் வாழ்கிறேன் - அன்புகூர்ந்து
காணாய் என்அகதி நிலை…
Disclaimer:
This website and its content is copyright of Uma Manoraj - © [2011].
All rights reserved.